Published : 20 Jan 2022 10:51 AM
Last Updated : 20 Jan 2022 10:51 AM

மதுரையில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

மதுரை அண்ணாநகர் எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் வண்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு சந்தேகிக்கும்படி நின் றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சிலைமான் புளியங்குளம் அருண்(29), யாகப்பா நகர் பிரதீப்(31), அண்ணாநகர் பகுதியிலுள்ள அன்புநகர் வெற்றிவேல் முருகன் (29), வண்டியூர் மாரிமுத்து (30), வலையங்குளம் ராம்குமார் (30) என்பது தெரியவந்தது.

இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் நோக்கில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. 5 பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 அரிவாள், 2 கத்தி, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x