Published : 19 Jan 2022 09:38 AM
Last Updated : 19 Jan 2022 09:38 AM

பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கோவை: கோவை வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக, போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, வெள்ளலூரைச் சேர்ந்த வருண் கார்த்திக், வே.மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இருவரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாநகர காவல் ஆணையருக்கு போத்தனூர் போலீஸார் பரிந்துரைத்தனர். அதன் பேரில், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, வருண் கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோர் கோவை மத்திய சிறையில் குண்டர்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x