திருமங்கலம் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

திருமங்கலம் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

Published on

மதுரை திருமங்கலம் உச்சப் பட்டியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (23). இவர் 14 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி பழகினார். இதை மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி மாணவியை காணவில்லை. பின்னர் அவர் அஜித்குமார் வீட்டுக்கு சென்றது தெரிந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆஸ்டின்பட்டி போலீஸில் புகார் செய்தனர்.

போலீஸார் அஜித்குமாரை போக்ஸோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in