Published : 17 Jan 2022 12:38 PM
Last Updated : 17 Jan 2022 12:38 PM

மதுரை: கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

மதுரை

மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் உசைன் (45). இவர் கடந்த 14-ம் தேதி பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹயத்துக்கான் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, அவரை இருவர் வழிமறித்து, ஆயுதத்தைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். ஆனால், அவரிடம் பணமில்லாததால் அவர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து புகாரின்பேரில், திடீர்நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் உசைனை பணம் கேட்டு மிரட்டியவர்கள் மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (24), மாரிமுத்து (23) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x