Published : 17 Jan 2022 10:26 AM
Last Updated : 17 Jan 2022 10:26 AM

திருப்பத்தூர் அருகே பெண் உடல் மீட்பு

திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த பெண்ணை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x