

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோதண்டன் (55). இவரது மனைவி சிந்து (48). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பீரோ திறக்கும் சத்தம் கேட்டு கோதண்டன் கண் விழித்தார்.
அப்போது, பீரோ இருக்கும் அறையில் ஒருவர் பணம், நகையை திருடுவதைக் கண்ட கோதண்டன் வெளிபக்கமாக கதவை பூட்டிவிட்டு கூச்சலிட்டார்.
உடனே, அங்கு திரண்ட பொதுமக்கள் வீட்டில் திருட முயன்ற நபரை பிடித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் அதேபகுதியைச் சேர்ந்த வினோத்(20) என்பதும், இவர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த வினோத்தை கைது செய்தனர்.