Published : 13 Jan 2022 11:07 AM
Last Updated : 13 Jan 2022 11:07 AM

விழுப்புரம்: சிறை கைதி மரணம்

விழுப்புரம்

விழுப்புரத்தில் சிறை கைதி மரணம் அடைந்தார்.

திண்டிவனம் அருகே உள்ள ரோஷணைபாட்டை அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சங்கர் (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ஆட்டோ திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 16-ம்தேதி சங்கரை திண்டிவனம் போலீஸார் கைது செய்து விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்த சங்கருக்கு நேற்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனே மாவட்ட சிறைச்சாலை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கரை, முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுசம்பந்தமான முதல் தகவல் அறிக்கையை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணைக்காக போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையை நீதித்துறை நடுவர் விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x