

சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடல் கிராமத்தில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் கடந்த 10-ம் தேதி இரவு, மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ4,500 பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
கோயிலின் தர்மகர்த்தா சுப்பிரமணியன் (63) அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பெருமாள்குளத்தை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் சதீஷ்முருகன் (23) உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ரூ.4,500 பணத்தை மீட்டனர்.