Published : 12 Jan 2022 12:46 PM
Last Updated : 12 Jan 2022 12:46 PM

சென்னையில் பாலியல் வழக்கில் முதியவர் கைது

சென்னை: சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதியவர் கைது செய்யப்பட்டார்.

கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தற்போது 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு சமீபகாலமாக சற்றே மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்துள்ளனர். விசாரணையில், 2015-ல் அச்சிறுமியின் உறவினர் நாராயணன்(59) என்பவர், அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், நாராயணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x