Published : 12 Jan 2022 11:02 AM
Last Updated : 12 Jan 2022 11:02 AM

பேரையூர் அருகே மின்வாரிய ஆய்வாளர் தற்கொலை

பேரையூர் அருகே மின்வாரிய ஆய்வாளர் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பூசலாபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). மின்வாரிய ஆய்வாளராக பணி புரிந்தார்.

குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த அவர் கடந்த 5-ம் தேதி விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், சேடபட்டி போலீஸார் விசாரிக் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x