Published : 11 Jan 2022 01:26 PM
Last Updated : 11 Jan 2022 01:26 PM

சிறுமி பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் 5 பேர் கைது

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் உடல் நலக்குறைவால் அண்மையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (28), வெங்கடேசன்(77), மோகன்(32) ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் (25), பிரபு(37), பாபு (22), சத்தியராஜ்(22), மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த கருணாநிதி மனைவி குப்பு (50) ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x