Published : 11 Jan 2022 11:35 AM
Last Updated : 11 Jan 2022 11:35 AM

விருதுநகரில் மனைவி குத்திக் கொலை: கணவர் காவல் நிலையத்தில் சரண்

கற்பகம்

விருதுநகர்: விருதுநகர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் கண்ணன் (32). திருமங்கலத்தில் உள்ள பொதுத்துறை வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கற்பகம் (30). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கற்பகத்தின் நடத்தையில் கண்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கற்பகத்தை கத்தியால் குத்திக் கொலை செய்த கண்ணன், பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கற்பகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கண்ணனை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x