திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சேவூர் தேவேந்திரன் நகரை சேர்ந்தவர் நடராஜ் (47). இவர், கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி உறவினரின் 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயார், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, நடராஜை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நடராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் நடராஜ் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in