Published : 05 Jan 2022 11:42 AM
Last Updated : 05 Jan 2022 11:42 AM

இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் திண்டுக்கல்லில் மேலும் 5 பேர் கைது

திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் குத்தகை எடுத்ததில் முன் விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராகேஷ் குமார் (26). இவர் மீன் குத்தகை விரோதம் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக மேற்கு மரியநாதபுரம் பிரகாஷ், ஜான்சூர்யா, கணேசமூர்த்தி, மரியபிரபு, ஆகிய 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில்,இது தொடர்பாக மேலும் சிலரைத் தேடிவந்தனர். இதில் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த சகாயஜான் பால்(43), ஆனந்தராஜ்(42), இருதயராஜ்(36), ஆஸ்டின் நெபக், சிங்கராயர் (31) ஆகிய மேலும் 5 பேரைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x