மதுரையில் சிலைமான் அருகே முதியவர் அடித்துக் கொலை: அடுத்தடுத்து கொலையால் மக்கள் அச்சம்

மதுரையில் சிலைமான் அருகே முதியவர் அடித்துக் கொலை: அடுத்தடுத்து கொலையால் மக்கள் அச்சம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் அருகே நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று இரவு முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அங்கையர்கண்ணி நகரில் உள்ள காலியிடத்தில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் மது அருந்திக் கொண்டு இருந்தார். அப் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் இதை தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த இளைஞர் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த சிலைமான் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த முதியவர் யார் என விசாரிக்கின்றனர். மேலும் கொலையாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சக்கிமங்கலம் சமத்துவபுரம் அருகே பிரேம் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு முதியவர் கொலையுண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விரைந்தனர். உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று முன்தினம் இரவு சக்கிமங்கலம் சமத்துவபுரம் அருகே பிரேம் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில்,நேற்று இரவும் சக்கிமங்கலம் பகுதியில் முதியவர் கொலையுண்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த கொலையால் சிலைமான் போலீஸாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in