Published : 29 Dec 2021 06:55 AM
Last Updated : 29 Dec 2021 06:55 AM

அரக்கோணம் அருகே முகமூடி கொள்ளை வழக்கில் பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது

அரக்கோணம் அருகே ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்பட பாணியில் ஏர் கன் மூலம் சுட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துஉள்ளனர். இவர்களிடம் இருந்து ஏர் கன், லேப்டாப், கேமரா உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டில் வசித்து வருபவர் புஷ்கரன்(23). இவரது வீட்டில் கடந்த 17-ம் தேதிநள்ளிரவு முகமூடி அணிந்த கும்பல் கொள்ளையடிக்க கதவைதட்டியுள்ளனர். கதவை திறந்தபோது கொள்ளையர்களை பார்த்த புஷ்கரன், கதவை மீண்டும் மூடியுள்ளார். அப்போது, ஜன்னல் வழியாக கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் புஷ்கரன், அவரது பாட்டி ரஞ்சிதம்மாள் மீது துப்பாக்கி ரவை பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த நேரத்தில் கதவை உடைத்துவீட்டுக்குள் புகுந்த கும்பல் புஷ்கரனை கத்தியால் தாக்கிபீரோவில் இருந்து ரூ.25 ஆயிரம், பெண்கள் அணிந்திருந்த 15 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில்திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகேயுள்ள வியாசபுரத்தைச் சேர்ந்த சின்னராசு (23) என்பவர் இதேபோன்ற குற்றச்செயல்களில் ஏற்கெனவே ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் தனிப்படையினர் விசாரித்தபோது புஷ்கரன் வீட்டில் கொள்ளைஅடித்ததை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த 17வயது பிளஸ் 2 மாணவர் ஒருவரையும் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பால்வாய்சத்திரம் கிராமத்தில் சொந்த பாதுாப்புக்காக ரேணு என்பவர் ஏர் கன் வாங்கி வைத்துஇருந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அவரது வீட்டில் இவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டபோது இந்த ஏர் கன்னையும் திருடியுள்ளனர். இந்த ஏர் கன்னை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூடியூப் வீடியோக்கள் மூலம் பார்த்த 17 வயது சிறுவன் பயிற்சியும் எடுத்துள்ளார். அவர்தான் புஷ்கரன் வீட்டில் ஏர் கன் மூலம் சுட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x