பொள்ளாச்சியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை

பொள்ளாச்சியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
Updated on
1 min read

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த டி. நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கலாமணி (65).கணவரை இழந்த இவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மகள் பிரியா(36)வுடன் வசித்து வந்தார்.

விவசாய தோட்டங்களுக்கு கூலி வேலைக்குச் சென்றுவந்தார். மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற மனவேதனையில் கலாமணி இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று கலாமணி வேலைக்கு செல்லாததால் சந்தேகம் அடைந்த தோட்ட உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், உறவினர்கள் கலாமணி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு தாயும் மகளும் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொள்ளாச்சி தாலுகா போலீஸார், இருவரின்சடலங்களையும் கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in