திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை

கோவிந்தராஜ்.(கோப்புப்படம்)
கோவிந்தராஜ்.(கோப்புப்படம்)
Updated on
1 min read

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை மர்ம நபர் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். அவரை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் பெரிய கொம்மேஸ்வரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபனா(37). இவரது கணவர் கோவிந்தராஜ் (42). இவர், வீரவர் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி எலெக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை கோவிந்தராஜ் தனது கடையில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், இவருடன் தகராறில் ஈடுபட்டார்.

இதையடுத்து, கடையை விட்டு வெளியேறிய கோவிந்தராஜ் அருகேயுள்ள திரவுபதியம்மன் கோயில் வழியாக சென்றார். அவரை விடாமல் விரட்டிச்சென்ற அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோவிந்த ராஜ் கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி யோடினார். இதில், சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரை கொலை செய்த நபர் யார்? தேர்தல் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in