Last Updated : 15 Oct, 2021 05:53 PM

 

Published : 15 Oct 2021 05:53 PM
Last Updated : 15 Oct 2021 05:53 PM

தூத்துக்குடியில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை: 90க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொலை உட்படப் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39). இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 90க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீஸார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், முத்தையாபுரம் பொட்டலக்காடு பகுதியில் பதுங்கியிருந்த அவரை இன்று பிற்பகலில் போலீஸார் சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு துரைமுருகன் தப்ப முயன்றார். அவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்தைத் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், டவுன் டிஎஸ்பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீஸார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் திருமலையாபுரம் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x