கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ரூ.7 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகள் கடத்தல்

5 பேரை கைது செய்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகள்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகள்.

Updated on
1 min read

விழுப்புரம்: கடலூர் மாவட்​டம் சேத்​தி​யாதோப்​பில் ரூ.7 கோடி மதிப்​புடைய பழங்​கால 3 சுவாமி சிலைகளை கடத்த முயன்ற 5 பேரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

கடலூர் மாவட்​டம் சேத்​தி​யாதோப்பு கூட்​ரோடு மேம்​பாலம் அருகே விழுப்​புரம் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஆய்​வாளர் ரவீந்​திரன் தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று முன்​தினம் பிற்​பகலில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது பிளாஸ்​டிக் பைகளு​டன் நின்​றிருந்த 5 பேரை பிடித்​தனர்.

பைகளை சோதனை​யிட்​ட​தில் 56 செ.மீ. உயரம்- 19 கிலோ எடை​யில் பூதேவி சிலை, 37 செமீஉயரம் - 10 கிலோ எடை​யில் திரு​ஞானசம்​பந்​தர் சிலை, 55 செமீ உயரம் - 12.40 கிலோ எடை​யில் சிவ​காமி சுந்​தரி சிலை என மூன்று பழங்​கால உலோக சிலைகள் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இவற்​றின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி​யாகும்.

போலீ​ஸார் மேற்​கொண்ட விசா​ரணை​யில் குறிஞ்​சிப்​பாடி வடலூரைச் சேர்ந்த சுரேஷ், திரு​நாரையூரைச் சேர்ந்த ராஜலிங்​கம், வடக்கு கொளக்குடியைச் சேர்ந்த முத்​துராஜ், திருச்​சின்​னபுரத்தைச் சேர்ந்த ராஜவேல், செந்​தில்​கு​மார் ஆகியோர் என்​பது தெரிய​வந்​தது. மேலும் சிலைகளை விற்​பனை செய்​வதற்​காக உலோகத்​தில் உள்ள தங்​கத்​தின் தூய்​மையை பரிசோ​திக்க சிலைகளின் சில பகு​தி​களை வெட்டி சேதப்​படுத்​தி​யதும்,

கும்​பகோணத்​தில் இருந்து சென்​னைக்கு செல்​லும் நபரிடம் சிலைகளை ஒப்​படைக்க 5 பேர் காத்​திருந்​ததும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதுகுறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து 5 பேரை​யும் கைது செய்து சென்னை புழல் மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

மேலும் அவர்​களிடம் இருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட சுவாமி சிலைகள், எந்த கோயிலை சேர்ந்​தது என்​பதை கண்​டறிய, விசா​ரணை அதி​காரி​யாக வேலூர் சரக ஆய்​வாளர் முனி​யம்​மாள் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்​படை போலீஸாரின் விரைவான நடவடிக்​கையை டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் உள்​ளிட்ட காவல் துறை உயர்​ அதி​காரி​கள்​ வெகு​வாக பா​ராட்​டினர்.

<div class="paragraphs"><p>சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகள். </p></div>
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” - டி.கே.சிவகுமார் வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in