Last Updated : 10 Nov, 2020 09:42 PM

 

Published : 10 Nov 2020 09:42 PM
Last Updated : 10 Nov 2020 09:42 PM

சிவகங்கையில் சிறுமியை கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கையில் சிறுமியைக் கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை இந்திராநகரைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவர் திருப்பூரில் டெய்லராக வேலை செய்தார். இவரது மனைவி உஷா, மகன் அஜய்குமார், மகள் அட்ஷயா (8) ஆகியோருடன் இந்திராநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான அட்ஷயா, அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

2013 ஜூலை 4-ம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற அட்ஷயாவை காணவில்லை. இதுகுறித்து அவரது தாயார் உஷா சிவகங்கை டவுன் போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் ஜூலை 7-ம் தேதி உஷா வீட்டின் அருகே உள்ள உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க அலுவலகத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து அங்கு போலீஸார் சோதனையிட்டத்தில் அட்ஷாவை கொலை செய்து, அவரது உடலை சாக்குபையில் கட்டி அலுவலக சுவருக்குள் வைத்து பூசப்பட்டிருந்தது.

தொடர்ந்து போலீஸார் விசாரித்ததில் அந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுகுடியைச் சேர்ந்த அமல்ராஜ் (30) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் தனது அலுவலகம் அருகே சிறுமி இயற்கை உபாதை கழித்ததால் ஆத்திரத்தில் கல் எரிந்ததாகவும், அந்த கல் பட்டு சிறுமி இறந்ததாகவும், இதையடுத்து சிறுமியை சுவரில் வைத்து பூசியதாகவும் அமல்ராஜ் வாக்குமூலம் அளித்தார்.

அவரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த ரபீ, அமல்ராஜ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x