Published : 15 Oct 2020 12:45 PM
Last Updated : 15 Oct 2020 12:45 PM

விருதுநகரில் ஆசிரியையிடம் 5 சவரன் செயின் பறிப்பு

விருதுநகரில் ஆசிரியை ஒருவரிடம் 5 பவுன் நகை வழிப்பறி செய்யப்பட்டது. குற்றவாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுமணி (58). இவர், திருமங்கலம் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.

அவர், இன்று காலை விருதுநகர் அருப்புக்கோட்டை சாலை மேம்பாலம் அருகே கருமாதிமடம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறுவதற்காக
நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் 5 சவரன் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.இது குறித்து வேலுமணி
விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பஜார் போலீஸார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

காலை நேரத்தில் நடந்த இந்த வழிப்பறிச் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x