மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினர்கள் 2 பேர் கைது

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினர்கள் 2 பேர் கைது
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது உறவினர்கள் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டனர்.

ஆமத்தூர் அருகேயுள்ள மூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரது 15 வயது மனவளர்ச்சி குன்றிய மகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மனவளர்ச்சி குன்றிய சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. விசாரணையில் உறவினர்கள் இருவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அண்ணன் முறையான கணேசன் மற்றும் பாண்டி ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அதையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கர்ப்பமான பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுமி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in