Published : 06 Jul 2020 07:42 AM
Last Updated : 06 Jul 2020 07:42 AM

அதிமுக பிரமுகர் கொலை: 7 பேர் கைது

மீஞ்சூர் அருகே உள்ள வாயலூரில்அதிமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தசிலம்பரசன்(32) கடந்த 3-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகளை மீஞ்சூர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக வாயலூரை சேர்ந்த மூர்த்தி, எண்ணூரைசேர்ந்த மணவாளன், மதன்குமார், திருவொற்றியூரை சேர்ந்த ஜெயபால், மீஞ்சூரைசேர்ந்த தீபன், மோகன், அத்திப்பட்டை சேர்ந்த மோகன்ராஜ் ஆகிய 7 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்த கொலை நடந்தது தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x