போக்ஸோ சட்டத்தில் தேடப்பட்டவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரண்

போக்ஸோ சட்டத்தில் தேடப்பட்டவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரண்
Updated on
1 min read

17 வயது சிறுமியைக் கடத்திச் சென்றதாக போக்ஸோ சட்டத்தில் தேடப்பட்டவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே தருவைகுளத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மகேந்திரன்(22). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு 17 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போ

லீஸார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டனர். மேலும், மகேந்திரன் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், மகேந்திரன் நேற்று கோவில்பட்டி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், அவரை 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in