சிறையில் நெரிசலைத் தவிர்க்க சிறு வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமீன்

சிறையில் நெரிசலைத் தவிர்க்க சிறு வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமீன்
Updated on
1 min read

சிறையில் நெரிசலை தவிர்க்க சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் மதுவிலக்கு சட்டம், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது.

இதையடுத்து சிறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள 18 கைதிகளின் பட்டியலை சிறை அதிகாரிகள் மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானுவிடம் வழங்கினர்.

பின்னர் மாவட்ட நீதிமன்றமே முன்வந்து விசாரணை நடத்தி 18 பேரில் 16 பேருக்கு ஜாமீன் வழங்கியது. 2 பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in