Last Updated : 08 Apr, 2020 03:32 PM

 

Published : 08 Apr 2020 03:32 PM
Last Updated : 08 Apr 2020 03:32 PM

விருதுநகரில் கல்லூரி மாணவர் கொலை: திமுக ஒன்றிய கவுன்சிலர், மகன்கள் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக ஒன்றிய கவுன்சிலர், அவரது மன்கள் உள்பட 6 பேர் இன்று கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வீரணன் மகன் தாமரைகனி (21). கல்லூரி மாணவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி சங்கர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த மாதம் ராமர் என்பவரது மகன் அய்யர் என்பவரது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தாமரைகனிக்கும் கணபதி சங்கருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஊர் பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்துவைத்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் கிருஷ்ணாபுரம் தெப்பம் அருகே சென்ற தாமரைகனியை சிலர் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவந்த தாமரைகனி இன்று காலை உயிரிழந்தார்.

விசாரணையில், முன்விரோதம் காரணமாக கணபதிசங்கர் தரப்பினர் தாமரைகனியை கத்தியால் குத்திக் கொலைசெய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, கணபதிசங்கர், அவரது தந்தை சக்திகணேசன், பெரியப்பா அண்ணாமலை ஈஸ்வரன் (திமுக ஒன்றிய கவுன்சிலர்), அவரது மன்கள் கணேஷ்குமார், சதீஷ்குமார், மாரிமுத்து என்பவரது மகன் ஜெய்கணேஷ் ஆகியோர் மீது சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து 6 பேரையும் இன்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x