Last Updated : 07 Mar, 2020 11:42 AM

 

Published : 07 Mar 2020 11:42 AM
Last Updated : 07 Mar 2020 11:42 AM

திருப்பரங்குன்றம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் தீவிர விசாரணை

திருப்பரங்குன்றம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் அருகே வைக்கம் பெரியார் நகர் பெருமால்நந்தல் கண்மாயில் 35 வயது மதிக்க தக்க இளைஞர் தலை இல்லாமல் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இன்று காலை தகவலறிந்து வந்த அவனியாபுரம் போலீஸார் சம்பவ இடத்தில் கிடந்த உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் கார்த்திக், திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ரிங் ரோடு அருகே சிறிது தூரம் சென்றது.
-
இறந்தவர் உடலில், பல்வேறு வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. கை விரல்கள் துண்டாகியுள்ளது. தலையைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவனியாபுரம் விஏஓ கணேசன் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் நேற்று மாலை 6 மணியளவில் 3 பேர் கொண்ட குழு இப்பகுதியில் மது அருந்தியதும் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரிகிறது.

கொலை செய்து விட்டு குற்றவாளிகள் தலையை தூக்கி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தலையையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x