Last Updated : 05 Mar, 2020 05:07 PM

 

Published : 05 Mar 2020 05:07 PM
Last Updated : 05 Mar 2020 05:07 PM

சிவகாசியில் தலைமைக் காவலர் தற்கொலை: மாவட்ட எஸ்.பி.க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவு

சிவகாசி

சிவகாசியில் தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவர் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காவல் நிலையத்தில் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர் அலெக்ஸாண்டரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர் அலெக்சாண்டருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் எந்த ஒரு அரசுத் துறையிலும் பணிபுரிபவர்கள் ஈடுபடக்கூடாது என்று அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் அலெக்சாண்டரின் தற்கொலைக்கு காரணம் என்னவென்பது குறித்து ஆர்டிஓ தலைமையில் முழுமையான ஒரு விசாரணை நடத்த அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x