மதுரையில் பள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு கத்திக் குத்து: பணம், நகை பறிப்பு

மதுரையில் பள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு கத்திக் குத்து: பணம், நகை பறிப்பு
Updated on
1 min read

மதுரையில் பள்ளி வளாகத்தில் ஆசிரியரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள் அவரிடமிருந்து பணம், நகையை பறித்துச் சென்றனர்.

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் செல்வகுமார்.

இவர் பள்ளி வளாகத்தில் காத்திருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி நகை, பணத்தைத் தருமாறு மிரட்டல் விடுத்துள்ளனர்.

உடைமைகளைத் தரத் தயங்கிய ஆசிரியரை தலை மற்றும் கைப் பகுதியில் குத்தி விட்டு அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் அவரிடமிருந்த 40 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடினர்.

படுகாயமடைந்த ஆசிரியர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தெற்குவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in