Last Updated : 28 Dec, 2019 05:26 PM

 

Published : 28 Dec 2019 05:26 PM
Last Updated : 28 Dec 2019 05:26 PM

கோவையில் 17  வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே 17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தை அடுத்த சீரநாயக்கன்பாளையம் அருகே சில வாரங்களுக்கு முன்னர் 17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில் இதுவரை மணிகண்டன் என்பவர் உட்பட 6 பேர் ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் குண்டர் தடுப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் வடவள்ளி நியூ தில்லை நகரை சேர்ந்த மணிகண்டன்(29) என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த மணிகண்டனை ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல்துறையினர் இன்று (டிச.28) கைது செய்தனர்.

இவர் முன்னரே கைது செய்யப்பட்ட மற்றொரு மணிகண்டனின் உறவினர் ஆவார். கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x