Published : 21 Nov 2019 09:43 AM
Last Updated : 21 Nov 2019 09:43 AM

2 ஆயிரம் ரூபாய் செல்லாது என கூறி 6 பேரிடம் ரூ.78.80 லட்சம் மோசடி: 3 பேருக்கு போலீஸார் வலை

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அரசு தடை செய்ய உள்ளதாகவும், அவற்றை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகவும் கூறி, மதுரையைச் சேர்ந்த 6 பேரிடம் ரூ.78.80 லட்சத்தை மோசடி செய்த பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் உட்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூரைச் சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு விரைவில் தடை செய்ய உள்ளதாகவும், அவற்றை 10 சதவீதம் கூடுதல் தொகையு டன் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாக பலரிடமும் கூறி வந்துள்ளனர். இதையறிந்து, மதுரையைச் சேர்ந்த சவுந்தரபாண் டியன்(42), மும்மூர்த்தி(28), கார்த்தி (29), லட்சுமணன்(32), வினோத் (31) உள்ளிட்ட 6 பேர் சுரேஷைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

தங்களிடம் ரூ.78.80 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளதாகக் கூறிய சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட 6 பேரும் 2 கார்களில் புறப்பட்டு பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதிக்கு அருகே சுரேஷின் அலுவலகம் உள்ளதாக கூறிய இடத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர்.

இதையடுத்து சுரேஷ், ஃபெலிக்ஸ் உள்ளிட்ட 3 பேர், மதுரையைச் சேர்ந்த 6 பேரிடமும் இருந்து ரூ.78.80 லட்சம் மதிப்பி லான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்ட னர். சாப்பிட்டுவிட்டு வாருங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ள லாம் என்று கூறி ஒரு ஹோட்ட லுக்கு அனுப்பி வைத்துவிட்டு, சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும் ரூ.78.80 லட்சத்துடன் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனராம்.

சாப்பிட்டுவிட்டு வந்து நீண்ட நேரமாகியும் சுரேஷை தொடர்பு கொள்ள முடியாததால், சந்தேக மடைந்த மதுரையைச் சேர்ந்த 6 பேரும் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் தெரி வித்தனர்.

விசாரணையின்போது, தாங் கள் பர்னிச்சர் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய மதுரையைச் சேர்ந்த 6 பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

இவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்ற சுரேஷ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

பணத்தை பறித்துச் சென்ற சுரேஷ், ஏற்கெனவே ஆன்லைன் மூலம் பண மோசடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அண்மையில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x