Published : 09 Nov 2019 02:10 PM
Last Updated : 09 Nov 2019 02:10 PM

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளித்த முதியவர் வழுக்கி விழுந்து பலி .

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளித்த முதியவர் வழுக்கி விழுந்து பலியானார்.

திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 84). இவர் தினந்தோறும் சரவணப் பொய்கையில் குளிப்பது வழக்கம்.

இன்று அதிகாலையும் வழக்கம்போல் அவர் சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றார்.

இந்நிலையில், குளிக்கச் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர் மனைவி மற்றும் உறவினர்கள் தேடிச் சென்றபோது துரைராஜின் உடல் சரவணப் பொய்கையில் மிதந்து.

இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்கு பதிவு செய்து துரைராஜ் உடலை உடற்கூறு பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணப் பொய்கையில் குளித்த முதியவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-எஸ்.சீனிவாசகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x