Published : 19 Oct 2019 05:16 PM
Last Updated : 19 Oct 2019 05:16 PM

ராமேசுவரம்  தனியார் தங்கும் விடுதியில் ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் உள்ள தனியார் விடுதி அறையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த சத்யா (35) என்பவரும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த திணையாய்குடியைச் சேர்ந்த முருகேசன் (30) என்பவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) ராமேசுவரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

சனிக்கிழமை நீண்ட நேரமாகி இருவரும் அறையை விட்டு வெளியே வராததால் தங்கும் விடுதியின் ஊழியர்கள் அவர்களின் அறையை தட்டியுள்ளனர்.

நெடுநேரம் தட்டியும் பதில் வராததால் கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் விஷம் அறிந்தியும், தூக்கிட்டும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ராமேசுவரம் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காவல்துறையினரின் விசாரணையில் இருவருக்கும் தனித்தனியாக குடும்பமும், குழந்தைகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x