Published : 21 Sep 2019 07:17 PM
Last Updated : 21 Sep 2019 07:17 PM

முகத்தில் அரிவாளால் வெட்டி பெண்ணை கொலை செய்ய முயற்சி: தம்பி இறந்த 6 மாதத்தில் மறுமணம் செய்ததால் அண்ணன் ஆத்திரம்

மதுரை

மதுரையில் கணவர் இறந்த 6 மாதத்தில் 2-வது திருமணம் செய்து பெண்ணை, முதல் கணவரின் அண்ணன் முகத்தில் அரிவாளால் வெட்டினார்.

உயிருக்கு ஆபத்தானநிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வரும் இந்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திலகர் திடலைச் சேர்ந்தவர் மகேஷ்வரி(30). இவரது கணவர் கடந்த 6 மாதத்திற்கு முன் இறந்துவிட்டார். இதைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் வற்புறுத்ததால் சமீபத்தில் மகேஷ்வரி 2-வது திருமணம் செய்துள்ளார்.இவர் மறுமணம் செய்தது அரவது கணவரின் அண்ணன் குமாருக்கு (45) பிடிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ்வரி அவரது வீட்டிற்கு முன் நின்றுள்ளார். அப்போது அரிவாளுடன் அங்கு சென்ற குமார், என் தம்பி இறந்த 6 மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் நீ திருமணம் செய்து கொள்கிறாயா?என்று சொல்லியபடியே மகேஷ்வரி முகத்தில் வெட்டியுள்ளார்.

அவர் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அங்க வருவதற்குள் குமார் தப்பியோடிவிட்டார். படுகாயம் அடைந்த மகேஷ்வரியை உயிருக்கு ஆபத்தானநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது திலகர் திடல் போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து குமாரை பிடித்து விசாரிக்கின்றனர்.

கணவர் இறந்த 6 மாதத்தில் மறுமணம் செய்து கொண்டதால் பெண்ணை, கணவரின் அண்ணன் அரிவாளால் முகத்தில் வெட்டிய இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x