

சென்னை
அடையார் தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா (45) நேற்று கைது செய்யப்பட்டார்.
சென்னை அடையார், இந்திரா நகர் முதல் அவென்யு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பரத்வாஜ்(50) கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் சுரேஷை போலீஸார் தேடி வந்தனர்.
விசாரணையில் அவர் கொல்லப்பட்டது கண்டறியப்பட்டது. சுரேஷ் பரத்வாஜ் கொலையில் தொடர்பு இருப்பதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பெண் வழக்கறிஞர் ப்ரீத்தாவை போலீஸார் தேடி வந்தனர். கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த ப்ரீத்தாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.