உணவகத்தில் நூதன முறையில் ரூ.24 லட்சம் கையாடல்: மேலாளர், உணவக ஊழியர்கள் என 4 பேர் கைது

உணவகத்தில் நூதன முறையில் ரூ.24 லட்சம் கையாடல்: மேலாளர், உணவக ஊழியர்கள் என 4 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: புரசை​வாக்​கம், கந்​தப்பா தெரு​வில் வசிப்​பவர் தானிஷ் (27). இவர், நண்​பர்​களு​டன் சேர்ந்து நுங்​கம்​பாக்​கம், வாலஸ் கார்​டன் 3-வது தெரு​வில் உணவகம் நடத்தி வரு​கிறார். கடந்த சில மாதங்​களுக்கு முன்பு தானிஷ் உணவகத்​தின் வரவு, செல​வு​களை ஆய்வு செய்​தார்.

பில் தொகையை மாற்​றி​யும், உணவக க்யூஆர் குறி​யீடுக்கு பதிலாக, தனி நபர் க்யூஆர் குறி​யீடு மூலம் பில் பணம் பெறப்​பட்​டிருந்​தது தெரிந்​தது.

இது தொடர்​பாக அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், உணவகத்​தில் மேலா​ள​ராக பணி செய்து வந்த கேரள மாநிலம், மலப்​புரத்​தைச் சேர்ந்த முகமது பாரிஸ் ரகு​மான் (26), சக ஊழியர்​களான வேலூர் மாவட்​டம் மேல்வழித் துணை​யாங்​குப்​பத்​தைச் சேர்ந்த முகமது ஹனீப் (23), ராயன் அஹமத் (21), வண்​ணாரப்​ பேட்​டையைச் சேர்ந்த பூபாலன் (23) ஆகியோர் உணவகத்​தில் ரூ.24 லட்​சத்​துக்கு மேல் மோசடி செய்​தது தெரிய வந்​தது.

இதையடுத்​து, இவர்​களை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். முன்​ன​தாக, அவர்​களிட​மிருந்து ஒரு கார் மற்​றும் 7 செல்​போன்​கள்​ பறி​முதல்​ செய்​யப்​பட்​டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in