ஓசூர் | அரசு அலு​வலர் மீது காரை ஏற்​றிக் கொலை: திமுக பிர​முகர் மகன் உட்பட 3 பேர் கைது

சிவ​மூர்த்​தி, ஆதித்​யா, ரித்​திக்​கு​மார், ஹரீஸ்

சிவ​மூர்த்​தி, ஆதித்​யா, ரித்​திக்​கு​மார், ஹரீஸ்

Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் தொழிலா​ளர் நலத்​துறை உதவி ஆய்​வாளரை காரை ஏற்​றிக் கொன்ற வழக்​கில் திமுக மாநில செயற்​குழு உறுப்​பினரின் மகன் உட்பட 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஓசூர் ராயக்​கோட்டை வீட்​டு​வசதி வாரிய குடி​யிருப்பு பகு​திக்கு அருகே உள்ள அன்னை அரவிந்​தர் நகரைச் சேர்ந்​தவர் சிவ​மூர்த்தி (54). இவர் ஓசூரில் தொழிலா​ளர் நலத்​துறை​யில் ஆய்​வாள​ராகப் பணிபுரிந்து வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சிவ​மூர்த்தி வீட்​டின் முன்பு இருசக்கர வாக​னங்​கள் நிறுத்​தப்​பட்​டிருந்​தன. அப்​போது, அவ்​வழி​யாக காரில் வந்த இளைஞர்​கள் சிலர் இருசக்கர வாக​னங்​களை எடுக்​கக் கோரி தொடர்ச்​சி​யாக காரில் ஹாரன் அடித்​துள்​ளனர்.

அப்​போது, சிவ​மூர்த்​தி, அவரது மகன் கிரு​பாகரன், இவரது 6 மாத குழந்​தை​யுடன் மனைவி அம்​சவேணி ஆகியோர் வீட்​டிலிருந்து வெளி​யில் வந்து இருசக்கர வாக​னத்தை எடுக்க முயன்​றனர்.

அப்​போது காரை ஓட்டி வந்த இளைஞர்​கள், சிவ​மூர்த்​தி​யின் குடும்​பத்​தினருடன் தகராறு செய்​தனர். அதைத் தொடர்ந்து, ஆத்​திரமடைந்த இளைஞர் காரை வேக​மாக ஓட்டி சிவ​மூர்த்தி உள்​ளிட்ட 4 பேர் மீதும் மோதினர். இதில் 4 பேரும் காயம் அடைந்​தனர். அங்​கிருந்​தவர்​கள் 4 பேரை​யும் மீட்​டு, ஓசூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். வழி​யில் சிவ​மூர்த்தி உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக ஓசூர் நகர போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்​து, ஓசூர் கும்​பாரப்​பேட்​டையைச் சேர்ந்த முன்​னாள் கவுன்​சிலரும், தற்​போதைய திமுக மாநில செயற்​குழு உறுப்​பினரு​மான சீனி​வாசனின் மகன் ஆதித்​யா(24) அவரது நண்​பர்​கள் ரித்​திக்​கு​மார்​(19), ஹரீஸ்​(19) ஆகிய 3 பேரை​யும் கைது செய்​தனர். காரை​யும் பறி​முதல் செய்​தனர்​.

<div class="paragraphs"><p>சிவ​மூர்த்​தி, ஆதித்​யா, ரித்​திக்​கு​மார், ஹரீஸ்</p></div>
12 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in