பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 25 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 25 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை
Updated on
1 min read

திருப்பூர்: ​திருப்​பூர் மாவட்​டம், பல்​லடம் பகு​தி​யில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த வங்​கதேச நாட்​டினர் 25 பேருக்கு தலா 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்​பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

திருப்​பூர் மாவட்​டம், பல்​லடம் அருகே கரைப்​புதூர் பகு​தி​யில் தனி​யார் பின்​னலாடை நிறு​வனத்​தில் வங்​கதேசத்​தினர் சட்ட விரோத​மாக தங்​கி​யிருப்​ப​தாக பல்​லடம் போலீ​ஸாருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தகவல் கிடைத்​தது. இதைத்​தொடர்ந்​து, போலீ​ஸார் அங்கு சோதனை நடத்​தி வங்​கதேசத்தை சேர்ந்த அப்​துல் ஹாலிக், அமினல் இஸ்​லாம் உள்​ளிட்ட 25 பேரை கைது செய்தனர்.

இவர்​களிடம் வங்​கதேசத்​தினருக்​கான அடை​யாள அட்​டைகளும் இருந்​தன. அவற்றை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். கைதானவர்​கள் மீது திருப்​பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கு விசா​ரணை முடிவடைந்த நிலை​யில் நீதிபதி சுரேஷ், நேற்று முன்​தினம் தீர்ப்பு அளித்​தார். இதில், குற்​றம் சாட்​டப்​பட்ட 25 பேருக்​கும் தலா 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​தார். அபராதத் தொகையை செலுத்​தத் தவறி​னால் மேலும் ஒரு மாதம் சிறைத்​தண்​டனை அனுபவிக்க வேண்​டும் எனவும் உத்​தர​விட்​டார்​.

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 25 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: 2 பேர் கைது - கோவை அதிர்ச்சியும், காவல் துறை நடவடிக்கையும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in