பழநி அருகே புஷ்பத்தூர் காகித ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பழநி அருகே புஷ்பத்தூர் காகித ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

பழநி: ​திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி அருகே புஷ்பத்​தூரில் உள்ள தனி​யார் காகித ஆலை​யில் காகிதம் அரைக்​கும் இயந்​திரத்தை சுத்​தம் செய்​யும் போது விஷ வாயு தாக்​கிய​தில் வடமாநிலத் தொழிலா​ளர்​கள் 2 பேர் உயி​ரிழந்​தனர்.

பழநி அரு​கே​யுள்ள புஷ்பத்​தூரில், திருப்​பூர் மாவட்ட எல்​லை​யில் தனி​யார் காகித ஆலை செயல்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், நேற்று காலை பழைய காகிதங்​களை அரைக்​கும் இயந்​திரத்​தின் (பாய்​லர்) உட்​பகு​தி​யில் இறங்கி சுத்​தம் செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த பிஹார் மாநிலத்​தைச் சேர்ந்த நூர் அலாம் (32), ராம்​புரூஸ் மஞ்​சூரி (35) ஆகியோர் விஷ வாயு தாக்​கிய​தில் மயக்கமடைந்​தனர்.

அங்​கிருந்​தவர்​கள் அவர்​களை மீட்​டு, திருப்​பூர் மாவட்​டம் மடத்​துக்​குளத்​தில் உள்ள அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். ஆனால், இரு​வரும் வழி​யிலேயே உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, இரு​வரது உடல்​களை​யும் பிரேதப் பரிசோதனைக்​காக உடுமலைப்​பேட்​டை​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். விஷ வாயு தாக்கி தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தது தொடர்​பாக, பழநி சாமி​நாத​புரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர்.

பழநி அருகே புஷ்பத்தூர் காகித ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஈரான் ஆரம்பப் பள்ளி மீது வான்வழித் தாக்குதல்: உயிரிழப்பு 85 ஆக உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in