சென்னை | சவ ஊர்வலத்தில் நடனமாடுவதில் மோதல்: உணவு டெலிவரி நிறுவன ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

மணிகண்டன், ஆனந்த்

மணிகண்டன், ஆனந்த்

Updated on
1 min read

சென்னை: ராயப்​பேட்​டை, ரோட்​டரி நகர் 15-வது தெரு​வைச் சேர்ந்​தவர் ஜீவா (31). தனி​யார் உணவு டெலிவரி நிறு​வனத்​தில் ஊழிய​ராக வேலை செய்து வரு​கிறார்.

கடந்த 15-ம் தேதி, இவரது வீட்​டருகே வசித்து வந்த பெண் உறவினர் ஒரு​வர் இறந்துவிட்​டார். மாலை​யில் அவரது இறுதி ஊர்​வலம் நடை​பெற்​றது. அதில், பங்​கேற்று ஜீவா நடன​மாடி​னார்.

மேலும், சிலரும் ஆடினர்.அப்​போது, இரு தரப்​பினரிடையே மோதல் ஏற்​பட்​டது. இதையடுத்து உறவினர்​கள் இரு தரப்​பை​யும் சமா​தானம் செய்து அனுப்பி வைத்​தனர்.

சிறிது நேரத்​துக்கு பிறகு ஜீவா அதே பகு​தி​யில் உள்ள ஆர்​.கே.சாலை, பறக்​கும் ரயில் நிலைய பாலம் அரு​கே​யுள்ள டீக்​கடை​யில் அமர்ந்​திருந்​தார்.

அப்​போது, அங்கு பைக்​கில் வந்த 2 பேர், சவ ஊர்வல தகராறை சுட்​டிக்​காட்டி கம்​பி​யால் தாக்கி விட்டு தப்பினர்.

இதில், காயம் அடைந்த ஜீவா சிகிச்​சைக்கு பின்​னர், ராயப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், தாக்​குதல் நடத்தி விட்டு தப்​பியது திரு​வல்​லிக்​கேணி, ரோட்​டரி நகரைச் சேர்ந்த மணி​கண்​டன் (25), அதே பகு​தி​யைச் சேர்ந்த ஆனந்த் (30) என்​பது தெரிந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

<div class="paragraphs"><p>மணிகண்டன், ஆனந்த்</p></div>
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு தொடங்க அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in