கடலூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி தலைவரைக் கொன்ற 10 பேருக்கு ஆயுள்

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 10 பேரையும், கடலூர் மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச்  சென்றனர்.
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 10 பேரையும், கடலூர் மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மாவட்​டத்​தில் ஊராட்சித் தலை​வர் கொலையான வழக்​கில் 10 பேருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

கடலூர் மாவட்​டம் கீழ்அருங்​குணம் ஊராட்​சித் தலை​வ​ராக இருந்​தவர் சுபாஷ். இவர், விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் அண்​ணாகி​ராமம் ஒன்​றியச் செயலா​ள​ராக​வும் பொறுப்பு வகித்து வந்​தார். இவருக்​கும், ஊராட்​சித் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட பெண் ஒரு​வரின் கணவரான தாமோதரன் என்​பவருக்​கும் தேர்​தல் தொடர்​பாக முன்​விரோதம் இருந்து வந்​தது. இரு தரப்​பினரும் ஒரே சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள். எனினும், தேர்​தல் பிரச்​சினை​யால் அவர்​களுக்குள் பகை அதி​க​மானது.

இந்​நிலை​யில், 2020 ஜூலை 19-ம் தேதி சுபாஷ் ஒரு கும்​பலால் வெட்டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இதுகுறித்து நெல்​லிக்​குப்​பம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, தாமோதரன், அவரது மகன் வில்​பார், ராஜதுரை, கவியரசன், சுபக​னேஷ், தமிழ்​வாணன், மணி​மாறன், தர்​ம​ராஜ், தினேஷ்கு​மார், பக்​கிரிசாமி, மணிவண்​ணன், வெங்​க​டாபதி ஆகிய 12 பேரை கைது செய்​தனர்.

இந்த வழக்கு கடலூர் மாவட்டமுதலா​வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. விசா​ரணை​யின்​போது வெங்​க​டாபதி இறந்து விட்​டார். பக்​கிரி​சாமி வழக்​கில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார். மற்ற 10 பேருக்​கும் ஆயுள் சிறை தண்டனை​யும், தலா ரூ.2 ஆயிரம்அபராத​மும் விதித்து நீதிபதிசரஸ்​வதி நேற்று தீர்ப்​பளித்​தார். தொடர்ந்​து, 10 பேரும் கடலூர் மத்​தி​ய சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in