உடுமலை அருகே விசாரணைக்காக வனத் துறையினரால் அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு

உடுமலை வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாரிமுத்து குடும்பத்தினர் மற்றும் பழங்குடி மலைவாழ் மக்கள். (உள்படம்) உயிரிழந்த மாரிமுத்து.
உடுமலை வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாரிமுத்து குடும்பத்தினர் மற்றும் பழங்குடி மலைவாழ் மக்கள். (உள்படம்) உயிரிழந்த மாரிமுத்து.
Updated on
2 min read

உடுமலை: வனத் துறை​யின​ரால் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்​ட​வர் உயி​ரிழந்த நிலை​யில், பழங்​குடி மக்​கள் வனத்துறை அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தினர். திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள மேல் குருமலை மலை​வாழ் கிராமத்தை சேர்ந்​தவர் மாரி​முத்​து(45). விவ​சா​யி. இவரது மனைவி பாண்​டி​யம்​மாள், மகள்​கள் சிந்​து, ராதிகா.

மாரி​முத்து உள்​ளிட்ட 4 பேர் மீது சில ஆண்​டு​களுக்கு முன்பு கஞ்சா கடத்​தல் உள்​ளிட்ட வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. அவற்றில் இருந்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதி​மன்​றத்​தால் மாரி​முத்து விடுவிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் மூணாறு செல்​வதற்​காக பேருந்தில் சென்ற மாரி​முத்​து​வை, சின்​னாறு வனத் துறை சோதனைச்​சாவடி​யில் இருந்த வனத் துறை​யினர் பிடித்து விசா​ரித்​துள்​ளனர். அப்​போது மாரி​முத்​து​விடம் புலி​யின் பல் இருந்​த​தாகக் கூறப்படுகிறது.

பின்​னர், உடுமலை வனச்​சரக அலு​வல​கத்​துக்கு மாரி​முத்​துவை அழைத்​துச் சென்று இரவு முழு​வதும் விசா​ரித்​துள்​ளனர். இதுகுறித்து மாரி​முத்​து​வின் குடும்​பத்​துக்கு தகவல் அளிக்​க​வில்​லை. இதற்​கிடை​யில், நேற்று காலை வனத் துறை அலு​வல​கத்​தில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் மாரி​முத்து இறந்​து கிடந்​துள்​ளார்.

தகவலறிந்து வந்த உடுமலை டிஎஸ்பி நமச்​சி​வா​யம் தலை​மையி​லான போலீ​ஸார் மாரி​முத்​து​வின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். இதுகுறித்து தகவலறிந்த மாரி​முத்​து​வின் உறவினர்​கள் மற்​றும் மலை​வாழ் கிராம மக்​கள் உடுமலை வனச்​சரக அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தினர். வனத் துறை​யினர் மாரி​முத்​துவை அடித்​துக் கொன்​ற​தாக அவர்​கள் குற்றம்​சாட்​டினர்.

இதுகுறித்து மலை​வாழ் மக்​கள் சங்​கத்​தினர் கூறும்​போது, “வனத் துறை அதி​காரி​கள் மீது எஸ்​.சி. எஸ்​.டி. வன்​கொடுமை சட்​டத்​தில் வழக்கு பதிவு செய்ய வேண்​டும். விசா​ரணை என்ற பெயரில், மாரி​முத்​துவை வனத் துறை​யினர் அடித்​துக் கொன்​றிருக்​கலாம் என சந்​தேகிக்​கிறோம்” என்​றனர். மாரி​முத்​து​வின் மனைவி பாண்​டி​யம்​மாள் உடுமலை காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரில், “நாங்​கள் பழங்​குடி​யினர்.

சட்​டத்​துக்​குப் புறம்​பாக மாரி​முத்​துவை வனத் துறை​யினர் அழைத்​துச் சென்​றுள்​ளனர். அவர் உயி​ரிழந்​ததற்கு வனத் துறை​யினர்​தான் காரணம். இது தொடர்​பாக முழு​மை​யாக விசா​ரித்​து, சம்​பந்​தப்​பட்ட​வர்​களை கைது செய்ய வேண்​டும்” என்று தெரிவித்துள்ளார். இந்​நிலை​யில், மாரி​முத்​து​வின் உடல் போலீ​ஸார் பாது​காப்​புடன் திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு நேற்று மாலை கொண்​டு​வரப்​பட்​டது.

திருப்​பூர் ஆட்​சி​யர் மனிஷ் நாரணவரே கூறும்​போது, “இந்த விவ​காரம் தொடர்​பாக விசா​ரிக்​கப்​பட்டு வரு​கிறது. திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் பிரேதப் பரிசோதனை நடை​பெற உள்​ளது. தற்​கொலை செய்து கொண்​ட​தாக வனத் துறை​யினர் தெரிவிக்​கின்​றனர். எனினும், கைது தொடர்​பாக குடும்​பத்​தா​ருக்கு சொல்​லாதது உள்​ளிட்ட விஷ​யங்​கள் தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். அவரது உடலில் காயங்​கள் இல்லை என்று போலீ​ஸார் தரப்​பில் கூறப்​படு​கிறது” என்​றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in