

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு - வல்லம் சாலையில் நேற்று போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த ஒரு ஆம்னி பேருந்தில் சோதனையிட்டபோது, அதிலிருந்த இருவரிடம் அதிக பணம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சையத் அலாவுதீன்(46), பாரீஸ் பகுதியைச் சேர்ந்த ஜாபர் அலி(51) என்பதும், வெளிநாடுகளில் இருந்து வரும் ஹவாலா பணத்தை விநியோகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.33.04 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்து வந்த திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரணைக்காக சையத் அலாவுதீன், ஜாபர் அலி ஆகியோரை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.