Last Updated : 06 Jul, 2025 01:55 PM

1  

Published : 06 Jul 2025 01:55 PM
Last Updated : 06 Jul 2025 01:55 PM

நாமக்கல் | ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஆர்டிஓ, மனைவி

நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மோகனூர் சாலை கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). இவர் திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பிரமிளா (51) என்ற மனைவியும், சன்யுக்தா (25) என்ற மகளும், ஆதித்யா (21) என்ற மகனும் உள்ளனர். மனைவி பிரமிளா மோகனூர் அருகே ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை நாமக்கல் அருகே வகுரம்பட்டி என்ற இடத்தில் நாமக்கல்-கரூர் ரயில்வே தண்டவாளத்தில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்து கிடந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரயில்வே போலீசார் இரு பிரேதங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இருவரது பிரேதமும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x