

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுள்ள கூலி தொழிலாளிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில், 17 வயதுள்ள இவரது மகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த சிறுமியை அவரது பாட்டி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்தபோது, தந்தையால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.