Published : 05 Jul 2025 06:05 AM
Last Updated : 05 Jul 2025 06:05 AM

மேலூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: காதலன் உள்ளிட்ட 3 இளைஞர்கள் கைது

தீபன்​ராஜ்,திரு​மாறன்,மதன்

மதுரை: மேலூர் அருகே இளம்​பெண்ணை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக பெண்​ணின் காதலன் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

மதுரை மாவட்​டம் மேலூர் பகு​தி​யைச் சேர்ந்த 19 வயது இளம்​பெண், தெற்கு தெரு கிராமத்​தில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் வேலை​பார்த்து வந்​துள்​ளார். இவர், அதே பகு​தி​யைச் சேர்ந்த தொழிலாளி தீபன்​ராஜ் (25) என்​பவரை காதலித்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், தீபன்​ராஜும், அந்த இளம்​பெண்​ணும் ஊருக்கு ஒதுக்​குப்​புற​மாக தனிமை​யில் இருந்​துள்​ளனர். அப்​போது, அங்கு தீபன்​ராஜின் நண்​பர்​களான
மதன் (25), திரு​மாறன் (24) ஆகியோர் வந்​துள்​ளனர். அவர்​கள் தீபன்​ராஜுடன் சேர்ந்​து, அந்​தப் பெண்ணை கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளனர்.
அங்​கிருந்து தப்​பிய இளம்​பெண், இதுகுறித்து பெற்​றோரிடம் தெரி​வித்​துள்​ளார். அவரது பெற்​றோர் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தீபன்​ராஜ், மதன், திரு​மாறன் ஆகியோரைக் கைது செய்​தனர். விசா​ரணைக்​குப் பிறகு மூவரை​யும் மேலூர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x