Published : 14 May 2025 01:59 PM
Last Updated : 14 May 2025 01:59 PM
திருச்சியில் கடன் தொல்லை காரணமாக, 2 மகள்களை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (42). இவருக்கு விக்டோரியா என்ற மனைவியும், ஆராதனா (9) ஆலியா (3) என்ற இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். விக்டோரியா ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். அலெக்ஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இதனிடையே, கடையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அலெக்ஸ் கடனாளி ஆகியுள்ளார்.
மேலும், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், அலெக்ஸ், விக்டோரியா தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தம்பதிகள் இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாங்களும் விஷமருந்தி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொன்மலை போலீஸார் நால்வரின் உடலையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT