Published : 09 May 2025 05:48 AM
Last Updated : 09 May 2025 05:48 AM

செய்யாறு அருகே திமுக பிரமுகர் கொலை: 2 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை

செய்யாறு: செய்​யாறு அருகே திமுக பிர​முகர் வெட்டி கொலை செய்​யப்​பட்​டது தொடர்​பாக தூசி போலீ​ஸார் 2 தனிப்​படை அமைத்து விசா​ரித்து வரு​கின்​றனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செய்​யாறு அடுத்த உக்​கம்​பெரும்​பாக்​கம் ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வ​ராக இருந்​தவர் பிர​பாவ​தி. இவரது கணவர் திரு​மலை(52). இவர், திரு​வண்​ணா​மலை வடக்கு மாவட்ட திமுக விவ​சாய அணி துணை அமைப்​பாள​ராக இருந்​தார்.

இந்​நிலை​யில், செய்​யாறில் இருந்து காஞ்​சிபுரம் நோக்கி இருசக்கர வாக​னத்​தில் நேற்று சென்று கொண்​டிருந்​தார். சோழ​வரம் அருகே சென்​ற​போது பின்​தொடர்ந்து வந்த மர்ம நபர்​கள் திரு​மலையை வழிமறித்து கத்​தி​யால் வெட்​டி​யுள்​ளனர்.

இதில், கழுத்​தில் வெட்​டுக்​கா​யம் அடைந்த திரு​மலை சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். தகவலை​யடுத்து தூசி போலீ​ஸார் விரைந்து சென்று திரு​மலை​யின் உடலைக்கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்​காக செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய முதற்​கட்ட விசா​ரணை​யில் திரு​மலை, வழக்கு விசா​ரணைக்​காக செய்​யாறு நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜராகி​விட்டு உக்​கம்​ பெரும்​பாக்​கம் கிராமத்தை நோக்கி சென்று கொண்​டிருந்​தவரை மர்ம நபர்​கள் கொலை செய்​து​ வி்ட்டு தப்​பி​யுள்​ளது தெரிய​வந்​தது. கொலை​யாளி​களைப் பிடிக்க இன்​ஸ்​பெக்​டர் ஜீவ​ராஜ் மணி​கண்​டன் தலை​மை​யில் இரண்டு தனிப்​படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முன் விரோதம் காரணமா? - கொலை​யான திரு​மலைக்​கும், அதே கிராமத்​தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவல​ராக பணி​யாற்றி வந்த ராஜா​ராம்​(37) என்​பவருக்​கும் இடையே முன்​விரோதம் இருந்துள்​ளது. கடந்த 2022-ம் ஆண்டு ராஜா​ராம், தனது கூட்​டாளி​களு​டன் திரு​மலையை கடத்​திச் சென்​று, அடித்து உதைத்து அனுப்பி வைத்​துள்​ளார்.

இந்த வழக்​கில் ராஜா​ராம் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். சமீபத்​தில் ஜாமீனில் ராஜா​ராம் வெளியே வந்​துள்​ள​தால் அவருக்கு இந்த கொலை​யில் தொடர்பு இருக்​கு​மா? என்ற கோணத்​தி​லும்​ போலீ​ஸார்​ வி​சா​ரித்​து வருகின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x