திருச்சி | பள்ளி வகுப்பறையில் இரவில் பெண்ணுடன் தங்கிய இளைஞர் கைது

திருச்சி | பள்ளி வகுப்பறையில் இரவில் பெண்ணுடன் தங்கிய இளைஞர் கைது
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்​டம் லால்​குடி வட்​டம் வாளாடி அரசு மேல்​நிலைப் பள்​ளிக்கு நேற்று முன்​தினம் காலை மாணவர்​கள், ஆசிரியர்​கள் வந்​தனர். அப்​போது, வகுப்​பறை ஒன்​றில் ஆண், பெண் என 2 பேர் உறங்​கிக் கொண்​டிருந்​தனர். அதிர்ச்​சி​யடைந்த ஆசிரியர்​கள் அவர்​களை எழுப்​பிய​போது, அந்த இளைஞர் மது போதை​யில் இருப்​பது தெரிய​வந்​தது.

அவர்​களை ஆசிரியர்​கள் கண்​டித்​த​போது, அந்த இளைஞர் அவர்​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது. பள்ளி நிர்​வாகம் அளித்த புகாரின் பேரில் லால்​குடி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, வகுப்​பறை​யில் இருந்த கீழ​வாளாடி கீழத் தெரு​வைச் சேர்ந்த நவீன்​கு​மாரை (28) கைது செய்​தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in